Saturday, October 18, 2008

உன் காதலுக்காக............


கடந்த ஜென்மங்களில்
தொலைத்த காதலைத் தேடி
அலைந்த காதலன்
நான்............................

உனை ஒரு விழிப்
பார்வையிலே உணர்ந்து
சேர நினைக்கையில் நீயும்
உணர்ந்தாய் நம்
பிணைப்பை.................

காதலை சொல்லுமுன்
உணர்வால் நாம்
வாழ்ந்த வாழ்க்கை
சொல்லும் நம்
காதலின் ஆழத்தை........

தொடர்ந்து வந்த
நாட்களின் துவக்கங்கள்
எல்லாம் உன்
துணையை உணர்த்திச்
சென்றன.......................

உன் அன்புணர்ந்து
விழி மூடி துயர் மறந்து
தோள் சாய
நினைக்கையில் ..............

எனைத் துரத்தும்
பாவங்களின் செத்த காலம்
என் காதலை மிதித்து
கொல்கிறதே.....................

நெஞ்சை பிளந்து
உயிரை பறித்துக்
கொல்லும் வலி தந்தது
என் காதல் ......................

மீண்டும் புதிதாய்
பிறந்து கற்போடு
காத்திருக்கிறேன்--- உன்
காதலுக்காக............

Monday, September 15, 2008

உண்மைக் காதல் .......


நாட்குறிப்பில்
எப்போதோ யாரும்
அறியகூடாதென்று நான்
கிறுக்கிய விஷயங்கள்
எனக்கே புரியாமல் ....

கண்ணை மூடித்
திறந்தால் உன்
நினைவுகளின் சுகம்
பசுமையாக
எனக்குள் ..........

நீ..........
எனதுலகம் என்று
வாழ்ந்த நாட்கள் கரி
பூசிக் கொண்டன - உன்
கல்யாண நாளில்.......

உன் மடி சாய்ந்து
கண்மூடித் திறக்கையில்
கலைந்த கனவாய்
போனதோ -என்
உண்மைக் காதல் .......

Saturday, September 13, 2008

சிநேகிதியே...................






கண்களில்
எப்போதும் மலர்ந்து
நிற்பவள் நீ - கனவுகளில்
வந்து என்
இரவுகளை விடியச்
செய்தவள் நீ................

புலம் பெயர்ந்து
சொந்தம் மறந்து
சுய உணர்விழந்து
வாழ்ந்த நாட்களின்
முடிவுரை நீ...........

மனம் மரித்துப்
போன நிலையிலும்
உடல்
உயிர் வாழ்ந்தது
நம் நட்புக்காகத் தானோ

உன் நட்பின்றி
வெறுமையாய் கழித்த
நாட்கள் என்னால்
சபிக்கப்பட்ட
நாட்களாய்...............

வரும்
பாதைகளில்
உன் நட்புக்கரம்
பிடித்து வாழ்வின்
துயர் தகர்ப்போம்
வாராய் -என் அன்பு
சிநேகிதியே...................

Wednesday, September 3, 2008

மகளே............. உன் நினைவுகளை தேடி



உனை நினைக்கும்
கணங்களில் என்
விழியில் நிறைந்து
கண்ணீராய்
விடுக்கிறாய்...............

உன் பெயரை
என் உதடுகள்
உணர்ந்து உச்சரிக்க
வெளிவரும் வார்த்தை
அழுகையாய்....................


நினைவு உள்ள
நேரங்களிலெல்லாம்
நீங்காமல் உன்
நினைவுகள் மட்டும்
நீங்கா பாரமாய்
மனதில்.....................

கரம் பிடித்து நடக்கையில்
விடுத்துக்
கொண்டோடுகையில்
மனம் பதறி
போனதடி...............

பிரிந்த நாள் முதல்
உனை
நினைக்காத நிமிடமும்
இல்லையடி ...............

என் நெஞ்சு மிதித்து
விளையாடிய
உன் பிஞ்சுக் கால்களின்
மென்மை......... என்
தூக்கம் மாற்றிய உன்
அழுகை
துக்கம் அகற்றிய மழலைச்
சிரிப்பு

நினைவுகள்
எல்லாம் இன்னும் என்னைக்
கொல்கின்றனவே.............
நான் இன்னும் எதற்காக
ஒரு நடைபிணமாய்......

Saturday, June 28, 2008

முத்தம்




















உதடுகளின் ஸ்பரிசத்தில்
உணர்ச்சிகளின்
குவியல்............

இதழ் பொருத்தி அணைத்துப்
பார்த்தும்
அணையவில்லை
காதல் தீ..........

Friday, June 27, 2008

காதல் நீ..........

நொடியில்
என்னுள் பூத்த
காதல் நீ..........
தொட்ட கணத்தில்
நெஞ்சில்
தீ.......................

தீண்டிய
பொழுதில்
மனமசைத்தாய்
என் நெஞ்சை
மழுங்கடித்தாய்....

காதல்
கடலில் நான்
தவிக்க மின்னலாய்
மறைந்தாய்..................

தொட்டு
தூக்கிய வாழ்க்கை
சொன்னது
காதல் என்பது கானல்.............

காதல்

காதல் -- உன்
கண்களில் விரிந்த
மலரோ
இல்லை
உன் கன்னக் குழிகளில்
புதைந்த உயிரோ..............

ஒரு கண்ணசைவில்
தொடும் மின்னலே........
என் கண் பறித்துப்
காதலுலகக் கண்
திறந்தாய்...................

என் உயிரில்
கருவாகி மீண்டும்
புதுப் பிறப்படைந்தேன்
உன்னால்.................

தொடர்ந்த விடியல்களில்
நீ அளித்த காமத்
தேனின் நிறைவுகள்
நீங்காத வடுக்களாய்
மனதில்.....................

வாழ்ந்த வாழ்க்கையின்
வாசம் தீருமுன்
தீமூட்டி போசுக்கினாய்
என் காதலை................

நொடிந்து போன
இதயத்தின் வலி
கேட்க மனமே நீ
மட்டும்............

விசும்பிப் பொங்கும்
அழுகையின் முன்
உன் நினைவுகள்
வெறும் பெருமூச்சுகளாய்..........

Friday, April 4, 2008

வாழ்க்கைப் பாதை

எங்கும் கிட்டா அமைதி தேடி நான்..............
தொலைந்த நாட்களின் தூரம்................
மீதமிருக்கும் வாழ்க்கையின்
பாதை எதுவும் புரியாமல்
எங்கோ தொடங்கி
எதிலும் புதிரான வாழ்க்கை........

கடந்த பாதைகளில் நிதமும்
அன்பில் தொடங்கி கண்ணீரில்
முடிந்த உறவுகள்.................
தொடரும் நினைவுகள்....
வீடு மறந்து விளையாடி
திரிந்த காலம்....
விருந்துச் சோற்றில் மனம்
நிறைந்த விடுமுறை நாட்கள்.......
முதல் மழையின் மண் வாசம்...........
காதலியின் முதல் ஸ்பரிசம்.................

எதுவும் நிலையில்லை என
மனம் உணரும் நிலையிலும்
உறவு ஒன்றை தேடித் தேடி
தொலைந்த நாட்களின் தூரம்................
மீதமிருக்கும் வாழ்க்கையின்
பாதை எதுவும் புரியாமல்
எங்கோ தொடங்கி எதிலும்
புதிரான வாழ்க்கை........
தொடர்கிறது........................................