Friday, April 4, 2008

வாழ்க்கைப் பாதை

எங்கும் கிட்டா அமைதி தேடி நான்..............
தொலைந்த நாட்களின் தூரம்................
மீதமிருக்கும் வாழ்க்கையின்
பாதை எதுவும் புரியாமல்
எங்கோ தொடங்கி
எதிலும் புதிரான வாழ்க்கை........

கடந்த பாதைகளில் நிதமும்
அன்பில் தொடங்கி கண்ணீரில்
முடிந்த உறவுகள்.................
தொடரும் நினைவுகள்....
வீடு மறந்து விளையாடி
திரிந்த காலம்....
விருந்துச் சோற்றில் மனம்
நிறைந்த விடுமுறை நாட்கள்.......
முதல் மழையின் மண் வாசம்...........
காதலியின் முதல் ஸ்பரிசம்.................

எதுவும் நிலையில்லை என
மனம் உணரும் நிலையிலும்
உறவு ஒன்றை தேடித் தேடி
தொலைந்த நாட்களின் தூரம்................
மீதமிருக்கும் வாழ்க்கையின்
பாதை எதுவும் புரியாமல்
எங்கோ தொடங்கி எதிலும்
புதிரான வாழ்க்கை........
தொடர்கிறது........................................