Monday, September 15, 2008

உண்மைக் காதல் .......


நாட்குறிப்பில்
எப்போதோ யாரும்
அறியகூடாதென்று நான்
கிறுக்கிய விஷயங்கள்
எனக்கே புரியாமல் ....

கண்ணை மூடித்
திறந்தால் உன்
நினைவுகளின் சுகம்
பசுமையாக
எனக்குள் ..........

நீ..........
எனதுலகம் என்று
வாழ்ந்த நாட்கள் கரி
பூசிக் கொண்டன - உன்
கல்யாண நாளில்.......

உன் மடி சாய்ந்து
கண்மூடித் திறக்கையில்
கலைந்த கனவாய்
போனதோ -என்
உண்மைக் காதல் .......

Saturday, September 13, 2008

சிநேகிதியே...................






கண்களில்
எப்போதும் மலர்ந்து
நிற்பவள் நீ - கனவுகளில்
வந்து என்
இரவுகளை விடியச்
செய்தவள் நீ................

புலம் பெயர்ந்து
சொந்தம் மறந்து
சுய உணர்விழந்து
வாழ்ந்த நாட்களின்
முடிவுரை நீ...........

மனம் மரித்துப்
போன நிலையிலும்
உடல்
உயிர் வாழ்ந்தது
நம் நட்புக்காகத் தானோ

உன் நட்பின்றி
வெறுமையாய் கழித்த
நாட்கள் என்னால்
சபிக்கப்பட்ட
நாட்களாய்...............

வரும்
பாதைகளில்
உன் நட்புக்கரம்
பிடித்து வாழ்வின்
துயர் தகர்ப்போம்
வாராய் -என் அன்பு
சிநேகிதியே...................

Wednesday, September 3, 2008

மகளே............. உன் நினைவுகளை தேடி



உனை நினைக்கும்
கணங்களில் என்
விழியில் நிறைந்து
கண்ணீராய்
விடுக்கிறாய்...............

உன் பெயரை
என் உதடுகள்
உணர்ந்து உச்சரிக்க
வெளிவரும் வார்த்தை
அழுகையாய்....................


நினைவு உள்ள
நேரங்களிலெல்லாம்
நீங்காமல் உன்
நினைவுகள் மட்டும்
நீங்கா பாரமாய்
மனதில்.....................

கரம் பிடித்து நடக்கையில்
விடுத்துக்
கொண்டோடுகையில்
மனம் பதறி
போனதடி...............

பிரிந்த நாள் முதல்
உனை
நினைக்காத நிமிடமும்
இல்லையடி ...............

என் நெஞ்சு மிதித்து
விளையாடிய
உன் பிஞ்சுக் கால்களின்
மென்மை......... என்
தூக்கம் மாற்றிய உன்
அழுகை
துக்கம் அகற்றிய மழலைச்
சிரிப்பு

நினைவுகள்
எல்லாம் இன்னும் என்னைக்
கொல்கின்றனவே.............
நான் இன்னும் எதற்காக
ஒரு நடைபிணமாய்......