Wednesday, September 3, 2008

மகளே............. உன் நினைவுகளை தேடி



உனை நினைக்கும்
கணங்களில் என்
விழியில் நிறைந்து
கண்ணீராய்
விடுக்கிறாய்...............

உன் பெயரை
என் உதடுகள்
உணர்ந்து உச்சரிக்க
வெளிவரும் வார்த்தை
அழுகையாய்....................


நினைவு உள்ள
நேரங்களிலெல்லாம்
நீங்காமல் உன்
நினைவுகள் மட்டும்
நீங்கா பாரமாய்
மனதில்.....................

கரம் பிடித்து நடக்கையில்
விடுத்துக்
கொண்டோடுகையில்
மனம் பதறி
போனதடி...............

பிரிந்த நாள் முதல்
உனை
நினைக்காத நிமிடமும்
இல்லையடி ...............

என் நெஞ்சு மிதித்து
விளையாடிய
உன் பிஞ்சுக் கால்களின்
மென்மை......... என்
தூக்கம் மாற்றிய உன்
அழுகை
துக்கம் அகற்றிய மழலைச்
சிரிப்பு

நினைவுகள்
எல்லாம் இன்னும் என்னைக்
கொல்கின்றனவே.............
நான் இன்னும் எதற்காக
ஒரு நடைபிணமாய்......

No comments: