கண்களில்
எப்போதும் மலர்ந்து
நிற்பவள் நீ - கனவுகளில்
வந்து என்
இரவுகளை விடியச்
செய்தவள் நீ................
புலம் பெயர்ந்து
சொந்தம் மறந்து
சுய உணர்விழந்து
வாழ்ந்த நாட்களின்
முடிவுரை நீ...........
மனம் மரித்துப்
போன நிலையிலும்
உடல்
உயிர் வாழ்ந்தது
நம் நட்புக்காகத் தானோ
உன் நட்பின்றி
வெறுமையாய் கழித்த
நாட்கள் என்னால்
சபிக்கப்பட்ட
நாட்களாய்...............
வரும்
பாதைகளில்
உன் நட்புக்கரம்
பிடித்து வாழ்வின்
துயர் தகர்ப்போம்
வாராய் -என் அன்பு
சிநேகிதியே...................
No comments:
Post a Comment