Friday, June 27, 2008

காதல்

காதல் -- உன்
கண்களில் விரிந்த
மலரோ
இல்லை
உன் கன்னக் குழிகளில்
புதைந்த உயிரோ..............

ஒரு கண்ணசைவில்
தொடும் மின்னலே........
என் கண் பறித்துப்
காதலுலகக் கண்
திறந்தாய்...................

என் உயிரில்
கருவாகி மீண்டும்
புதுப் பிறப்படைந்தேன்
உன்னால்.................

தொடர்ந்த விடியல்களில்
நீ அளித்த காமத்
தேனின் நிறைவுகள்
நீங்காத வடுக்களாய்
மனதில்.....................

வாழ்ந்த வாழ்க்கையின்
வாசம் தீருமுன்
தீமூட்டி போசுக்கினாய்
என் காதலை................

நொடிந்து போன
இதயத்தின் வலி
கேட்க மனமே நீ
மட்டும்............

விசும்பிப் பொங்கும்
அழுகையின் முன்
உன் நினைவுகள்
வெறும் பெருமூச்சுகளாய்..........

No comments: